இவைகள் ஸ்ரீ ராம் சர்மா-என்பவரால் எழுதப்பட்டவை. அவரது டைரி குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது.
1960- களில் நான் தஞ்சாவூரில் இருந்தேன். நான்கு சினிமா கொட்டகைகள் இருந்தன. நாலிலும் வெளியாகும் படம் பூராவும் பார்த்துவிடுவேன். அப்போது ரசிகர்கள் பற்றி நன்கு தெரிந்தது. பாசம் என்று ஒரு எம். ஜி.ஆர். படம். அதில் எம். ஜி. ஆர். அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்து அழுவது போல ஒரு காட்சி வரும். அதில் எம்.ஜி.ஆர். வாயை 'ஆ' வென்று திறந்து இருப்பது போல் காட்டி பின்னணியில் எரிமலை வெடித்து சிதறுவது போல் காட்டியிருப்பார்கள். நான் கமென்ட் அடித்தேன். 'எம்.ஜி.ஆர். கொஞ்சம் இந்த இடத்தில் நடிக்க சோக நடிப்பு வரவில்லை போல இருக்கிறதே'. பக்கத்தில் இருட்டில் இருந்து ஒரு குரல் கேட்டது. 'டேஅய்; யாரடா அவன், தொப்பை தாத்தா கிழுச்சுடுவாநா; உதையடா அவனை' நைசாக நழுவி குனிந்து கொண்டே பாத் ரூம் பக்கம் பொய் வாயில் படி அருகில் இருந்தே மிச்ச படத்தை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டேன். அடுத்தது ஒரு சிவாஜி படம். குங்குமம் என்று நினைக்கிறேன். 'ரொம்ப ஓவரா இருக்குது இல்லையா' என்று வாய் தவறி சொல்லிவிட்டேன். 'டேய்; அட்டை கத்தி; ஜிகினா பாவடை ஆளுடா இவன். வெளியில் வரும்போது மடக்குங்கடா' என்றான் ஒருத்தன். எடுத்தேன் சவாரி. இன்றைய தினத்தில் இருந்து நான் யாருக்கும் ரசிகன் அதாவது fan கிடையாது. குறை கூறுவதும், விமரிசனம் செய்வதும் கமென்ட் அடிப்பதும் நம்முடைய உரிமை.
Tuesday, February 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment