திருப்பூர்.
கண்ணதாசன் நடத்தும் 'தென்றல் திரை' பத்திரிகையில் தலைப்பு.
நேரு ஒரு முட்டாள்! அவர் தகப்பன் மோதிலால் ஒரு முட்டாள்!
பிரதமர் நேரு சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் நிருபர்கள், திராவிடநாடு கேட்கிறார்களே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க அதற்கு நான்சென்ஸ் என்று பதில் சொன்னார். தி.மு.க.வினர் 'அறிஞர் அண்ணாவை முட்டாள் என்று சொல்லிவிட்டார், லட்சக்கணக்கான தி.மு.க.வினருக்கு முட்டாள் பட்டமா! நேரு எங்கு வந்தாலும் கருப்புக்கொடி (Black Flag) காட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதைப் பற்றி தமிழக காங்கிரசார் , இது ஒரு சாதாரண வார்த்தை தான் சகஜமாக அனைவரும் பயன் படுத்துவது தான் என்று சொல்லிவிட்டார்கள். அதற்க்கு கண்ணதாசனின் reaction தான் மேலே சொன்ன தலைப்பு!
இதற்கு நான் ஒரு கார்டு வாங்கி 'தென்றல் திரை' பத்திரிகைக்கு எழுதினேன்.
நான்சென்ஸ் என்பதற்கு இந்த இடத்தில் 'முட்டாள் தனம்' என்று பொருள். நாம் செய்யும் ஒரு காரியம் அல்லது கொண்டிருக்கும் ஒரு கருத்து நமக்கு சரியாக இருக்கலாம், ஆனால் பிறருக்கு அது முட்டாள்தனமாகத் தெரியலாம்; இது ஒரு relative term அதாவது சார்பு நிலை வாதம். பார்க்கிறவர்களின் பார்வையை சார்ந்தது. அதற்காக இப்படி எழுதலாமா?
(வெற்றிநிலவன் குறிப்பு: பின்னாளில் கண்ணதாசன் இப்படி எழுதியதற்கு மன்னிப்பு கேட்டு வருந்தினார். )
Saturday, February 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment